சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்துவதில் பாஜக அரசு படுதோல்வி: முத்தரசன் விமர்சனம்

சென்னை: சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்துவதில் பாஜக அரசு படுதோல்வி என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு சிலிண்டர் பெற ரூ.1,050 வரை செலவிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஒரு கண்ணுக்கு வெண்ணெய்யும், மறு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வேட்டைக்கு உதவ, மக்களுக்கு துரோகம் இழைக்கிறது பாஜக அரசு எனவும் விமர்சனம் செய்துள்ளார்.

Related Stories: