சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,வங்கக்கடலில் அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு நகர்ந்து இன்று மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.நாளை புயலாக வலுவடைந்து வடமேற்கு நகர்ந்து மே 10ல் வட ஆந்திரா, ஒடிசா கரையோரத்தில் நிலவும்.வங்கக்கடலில் உருவான புயல் வடக்கு - வடகிழக்கில் நகர்ந்து ஒடிசா கடற்கரையில் நீடிக்கும்.