கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகரின் சகோதரரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் நடந்து வருகிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், சாட்சியங்கள் என இதுவரை 220க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. . கொடநாடு பங்களாவில் மர வேலை செய்து கொடுத்த பர்னிச்சர் கடை உரிமையாளரும், அதிமுக நிர்வாகியுமான சஜீவன் உட்பட பலரிடம் சமீபத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.இந்நிலையில் நேற்று காலை 11 மணி முதல் அதிமுக பிரமுகரும், மர வியாபாரியுமான சஜீவன் சகோதரர் சுனிலிடம் ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் கோவையில் விசாரணை நடத்தினர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு நடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி இரவில் நீலகிரி மாவட்டம் கூடலூர் செக்போஸ்ட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.