சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ரா எழுதிய தி லர்கிங் ஹைட்ரா (THE LURKING HYDRA) புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.பின்னர் அவர் கூறியதாவது:இப் புத்தகம் தீவிரவாத்திற்கு எதிரான வாதத்தை முன் வைக்கிறது. தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவதில் இந்திய ராணுவம் அதிக திறன் வாய்ந்துள்ளது. பல்வேறு நாடுகள் இந்தியா மீதான போரை நிகழ்த்தி உள்ளது. 1990ம் ஆண்டு, தான் ராணுவத்தில் ஒரு பிரிவில் சேர்ந்த போது, தீவிரவாதத்தை எதிர்ப்பது என்பது தினசரி வழக்கமான ஒன்றாக இருந்தது. பிரதமர் மோடி 2014ல் பதவியேற்ற பின்பு, ராணுவத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. தீவிரவாதத்தை எதிர்த்து சண்டையிடுவதில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளவில்லை.