கல்வி நிறுவனங்களில் மத மாற்றங்களை தடுக்க விதிகளை வகுக்ககோரி வழக்கு: தமிழக அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் நடப்பதாக குற்றம் சாட்டி அதை தடுக்க உரிய விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், எஸ்.ஆனந்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது,   இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால் ஆரம்ப நிலையிலேயே  தள்ளுபடி செய்ய வேண்டுமென்று அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் வாதிட்டார்.

 இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆனந்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், தனியார் தொலைக்காட்சி நடத்திய ரகசிய விசாரணையில் தமிழகத்தில் ஐந்து இடங்களில் கல்வி நிறுவனங்களில் மதமாற்றம் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறி கூடுதல் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories: