சென்னை: கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் நடப்பதாக குற்றம் சாட்டி அதை தடுக்க உரிய விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், எஸ்.ஆனந்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால் ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டுமென்று அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் வாதிட்டார்.