கேள்வி நேரத்தின்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர்ராஜீ பேசுகையில், ‘‘மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும். அந்த குளத்தில் லேசர் லைட் ஷோ நடத்த சுற்றுலாத்துறை முன்வர வேண்டும். அதே நேரத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் இளைஞராக உள்ளார். டாக்டராக உள்ளார். விஞ்ஞான ரீதியில் செய்து கொடுக்க வேண்டும்’’ என்றார். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்: சுற்றுலாத்துறை எந்த ஒரு இடத்தையும் சுற்றுலாத் தலமாக அறிவிப்பது இல்லை. ஓர் இடத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அத்தலத்திற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தை சுற்றுலாத்தலமாக அறிவித்து கூடுதல் வசதிகள் செய்யும் கருத்துரு ஏதும் அரசின் பரிசீலனையில் தற்போது இல்லை.