வருசநாடு : கடமலைக்குண்டு அருகே புதர்மண்டி கிடக்கும் பெரிய ஓடை பகுதியை தூர்வார வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலைக்குண்டு அருகே பாலூத்து பெரிய ஓடை பகுதியில் அதிக அளவில் நாணல் மற்றும் கருவேல மரங்கள் புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் இப்பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் புதர் பகுதியில் மது, கஞ்சா போன்ற போதைகளுக்கு அடிமையாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த ஓடை பகுதியில் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாகவும், தனியார் பிடியில் பெரிய ஓடை பகுதி சிக்கியுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.