நாகர்கோவில்: தேசிய அளவிலான மாஸ்டர்ஸ் தடகள போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 2ம்தேதி நடைபெற்றது. இதில் நீளம் தாண்டுதல், டிரிபிள் ஜம் போட்டிகளில் குமர மாவட்டத்தை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் திலீபன் 1 வெள்ளி மற்றும் 1 வெண்கல பதக்கமும், பெண் தலைமை காவலர் கிருஷ்ண ரேகா உயரம் தாண்டுதல், டிரிபிள் ஜம் மற்றும் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம் போட்டிகளில் 3 தங்க பதக்கம் மற்றும் வெள்ளி பதக்கமும், முதல் நிலை காவலர் டேவிட் ஜான் 3000 மீட்டர் ஓட்டத்தில் தங்க பதக்கமும் பெற்றனர்.