சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே விற்பனைக்காக புள்ளி மான்வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 35 கிலோ மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன. குறிப்பாக, புள்ளி மான்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட விளாமுண்டி வனப்பகுதியில் மான் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வனச்சரக அலுவலர் சரவணன் தலைமையில் வனத்துறையினர் 108 குமரன் கோவில் வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் கத்தி மற்றும் சாக்குப் பைகளுடன் சுற்றிய மூன்று பேரை பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 35 கிலோ மான் இறைச்சி இருந்தது.