கேடிசி நகர்: பாளை அருகே அரியகுளத்தில் கொள்முதல் நிலையத்தில் பாதுகாப்பாற்ற முறையில் நெல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மழை, வெயிலால் நெல் சிதிலமடைந்து போய் விடுமோ என்று திண்டாடி வருகின்றனர். பாளை அருகே அரியகுளத்தில் நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. அந்தப் பகுதி வயல்களில் அறுவடையாகும் நெல்லை, விவசாயிகள் இந்த கொள்முதல் நிலையத்தில் ஒப்படைக்கின்றனர். இவ்வாறு விவசாயிகள் வழங்கும் நெல், அங்கு திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நெல் கோடை மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும், ஒன்றுக்கும் உதவாததாக மாறியுள்ளன.