சென்னை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் இன்று மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் கோவையில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏப்.29, 30 ஆகிய 2 நாட்கள் விசாரித்த நிலையில் 3-ம் நாளாக தனிப்படையினர் பூங்குன்றனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை பிஆர்எஸ் மைதானத்தில் ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே சசிகலா உள்ளிட்டோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக 18 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தவர் பூங்குன்றன்.