தமிழகத்திற்கு புறப்பட்ட 4 இலங்கை தமிழர்கள் கைது

ராமேஸ்வரம்:  இலங்கையில் நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சியினால் வாழ்வாதார பிரச்னையில் சிக்கித் தவிக்கும் இலங்கை தமிழர்கள் பலர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர். இலங்கை போலீசார் மற்றும் கடற்படையினரின் கெடுபிடிகளுக்கிடையே இலங்கை தலைமன்னார், பேசாளை கடற்கரை பகுதியில் இருந்து படகுகளில் இவர்கள் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடிக்கு வருகின்றனர். ஏற்கனவே 80 தமிழர்கள் வந்துள்ள நிலையில், மேலும் ஏராளமானோர் வருவதற்கு தயாராக உள்ளதாக  தகவல்கள் வெளியாகி வருகின்றன. நேற்று அதிகாலை படகில் தமிழகம் வருவதற்காக யாழ்ப்பாணம் வேலனை கடற்கரையில் உடமைகளுடன் நின்றிருந்த ஒரு பெண் உட்பட 4 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்தனர். இலங்கை வவுனியா மாவட்டத்தை சேர்ந்த அவர்களை பிடித்த இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தினர். தமிழகத்திற்கு படகில் செல்ல காத்திருந்ததாக கூறியதை தொடர்ந்து, 4 பேரும் இலங்கை ஊர்க்காவல்துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Related Stories: