காஞ்சிபுரம்: கோடை வெயில் சுட்டெரித்து வந்த வேளையில் காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கோடை காலம் தொடங்கி, தமிழகத்திலேயே அதிக அளவாக காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் 111 டிகிரிக்கும் மேல் வெப்பநிலை தொடர்ந்து வந்ததால் குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பு பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில், திடீரென இடி மின்னலுடன் யாரும் எதிர்பாராத வகையில் கனமழை பெய்தது.