லக்னோ: உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்தை, பாலிவுட் நடிகை கங்கனா நேற்று லக்னோவில் சந்தித்தார். அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு வரும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்தார். கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி யோகியை சந்தித்த கங்கனா, தற்போது இரண்டாவது முறையாக சந்தித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளபக்கத்தில், ‘சமீபத்திய தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்ற பிறகு, முதல்வர் யோகி ஆதித்ய நாத்தை சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அவரது அன்பு, கருணை, அக்கறை ஆகியன, இந்த மாலைப் பொழுதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.