சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் அருங்காட்சியகத்தை சுற்றி பார்க்க பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் என பலரும் வருவதுண்டு. இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளி மாணவர்கள் அருங்காட்சியகத்துக்கு வந்திருந்தனர். அப்போது 1 ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் போலீஸ் உடையில் அங்கு வந்திருந்தது பார்வையாளர்களை ஈர்த்தது. அந்த குட்டி சிறுவனுடன் பெற்றோரும் வந்திருந்தனர்.