காங்கயம்: காங்கயத்தில் நேற்று முன்தினம் பலத்த சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. காற்று வேகமாக வீசியதால் காங்கயம் நகரப்பகுதிகளில் தாராபுரம் சாலை, சேரன் நகர், பாரதியார் நகர், ஆசிரியர் காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள், மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் நகரப்பகுதியில் உள்ள பல இடங்களில் மின் தடைபட்டது. நேற்று காலை காங்கயம் நகர பகுதியில் மழையால் சேதமடைந்த பகுதிகளை நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.