சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: இனிவரும் காலங்களில் கூடுதலாக மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தன்றும், நவம்பர் 1 உள்ளாட்சி தினத்தன்றும் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். மே1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று தமிழகத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். மக்கள் பங்கேற்கிற ஜனநாயகமான உள்ளாட்சி மைப்புகளில் கடந்த 10 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் புறக்கணிக்கப்பட்டு வந்தது.