ஈரோடு: ஈரோடு மாநகராட்சி உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் கடந்த 10 ஆண்டுக்கு மேலாக நடைபெற்று வருகின்றன. இதில், வில்லரசம்பட்டி நால்ரோடு அருகே கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் 10 அடி ஆழத்தில் குழிதோண்டி, பாதாள சாக்கடை நீரை சேகரித்து அனுப்புவதற்கான தொட்டி அமைக்க குழியை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது. பாறையை வெடி வைத்து தகர்க்க முடிவு செய்தனர். இதற்காக 6 வெடிகள் வைத்ததில் 4 வெடிகள் வெடித்தன.