வால்பாறை : வால்பாறையில் சுற்றுலா பயணிகள் குவியும் கூழாங்கல் ஆற்றில் உயிர்பலி வாங்கிய குழிகளை ராட்சத பாறைகள் மூலம் நிரப்பியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலாமான வால்பாறைக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள் வால்பாறை பகுதியில் ஆங்காங்கே ஓடும் ஆறுகளை பார்த்ததும் உடனே இறங்கி குளிக்க செல்கின்றனர். ஓடைகள், சிற்றோடைகள் என எதையும் விட்டு வைப்பது கிடையாது. அனைத்து பகுதிகளும் பசுமையுடன் காணப்படுவதால் ஆபத்தை உணராமல் இறங்கி விடுவது வழக்கம். அதிகப்படியான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வது கூழாங்கல் ஆறுதான்.
இந்த ஆற்றில் இறங்கி குளிப்பதற்கு ஒரு பகுதி உகந்ததாக இருந்தது. மற்றொரு பகுதியில் பாறைக்குழி இருந்ததால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தது.