சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் கோடை விடுமுறை காலத்தில் தாக்கலாகும் அவசர வழக்குகளை 20 நீதிபதிகள் விசாரிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது: உயர் நீதிமன்ற விடுமுறை மே 2 முதல் ஒரு மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரிக்க 20 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மே முதல் வாரம் மட்டும் திங்கட்கிழமை மற்றும் புதன் கிழமை மனுத்தாக்கல் செய்யலாம்.