சென்னை: பிரேசிலில் நடைபெற உள்ள கோடைகால செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக வீரர்கள் 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரேசில் நாட்டின் கேசியாஸ் டோசுல் என்ற நகரில் 24வது கோடைகால செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்-2022 போட்டி வருகிற மே1ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்க செல்லும் இந்திய அணியில் தமிழ்நாட்டை சார்ந்த நீச்சல் வீராங்கனை ஆர்.சினேகா, தடகள வீராங்கனை சமீகா பர்வீன் முஜிப், இறகுப்பந்து வீராங்கனை ஜெர்லின், டென்னிஸ் வீரர் பிரித்வி சேகர், தடகள வீரர்கள் மணிகண்டன் மற்றும் சுதன்ராஜேந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.