சித்த மருத்துவ பல்கலை மசோதா நிறைவேற்றம்

சென்னை: முதல்வரை வேந்தராக கொண்டு தமிழகத்தில் புதிதாக அரசு சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை தொடங்குவதற்கான சட்ட மசோதா, சட்டப் பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. இந்த சட்ட மசோதா நேற்று சட்டப் பேரவையில் ஆய்வுக்காக எடுக்கப்பட்டது. அதற்கான தீர்மானத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்மொழிந்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் சட்ட மசோதா நிறைவேறியது. அதேபோன்று, சென்னையில் உள்ள சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் போல், கோவை, மதுரை, திருப்பூர், ஓசூர் உள்ளிட்ட மாநகராட்சிகளில் பெருநகர வளர்ச்சி குழுமங்களை அமைப்பதற்கான சட்ட மசோதாவை வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி ஏற்கனவே அறிமுகம் செய்திருந்தார். இதை ஆய்வுக்கு எடுக்கும் தீர்மானத்தை அமைச்சர் முத்துசாமி முன்மொழிந்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் அந்த மசோதாவும் நிறைவேறியது.

Related Stories: