சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.எல்.ரவி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் ஏற்கனவே தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையில் இதே தொகுதியில் உள்ள ஆர்.பிரேமலதா என்ற வாக்காளர் தாக்கல் செய்த மனுவில், தேர்தலின்போது உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில், அவருக்கு எதிரான வழக்குகள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளார்.