திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே ரயில்வேதுறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாடி வீடு, கூரை வீடுகள் உள்பட 9 வீடுகளை துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி பொன்னிரை பகுதியில் ரயில்வே லைன் பகுதியில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடங்களில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடுகளை கட்டியிருந்தனர். கடந்த 2019ல் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற காலக்கெடு வழங்கியும் அகற்றவில்லை. அதையடுத்து மேலும் 40 நாட்கள் கால அவகாசம் வழங்கியும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை.