ஒரத்தநாடு: ஒரத்தநாடு நீதிமன்ற வளாகத்தில் உள்ள வட்ட சட்டப்பணிகள் குழு மூலம் பொதுமக்களுக்கு இலவச நூலகத்தை மாவட்ட நீதிபதி மதுசூதனன் திறந்து வைத்தார்.ஒரத்தநாடு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் தஞ்சை மாவட்ட தலைமை நீதிபதி மதுசூதனன் தலைமையில் ஒரத்தநாடு நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு அலுவலகத்தில் நூலகத்தை பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பயன்பெறும் வகையில் இலவசமாக திறந்து வைத்தார்.