ஒரத்தநாடு நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களுக்காக இலவச நூலகம்: நீதிபதி திறந்து வைத்தார்

ஒரத்தநாடு: ஒரத்தநாடு நீதிமன்ற வளாகத்தில் உள்ள வட்ட சட்டப்பணிகள் குழு மூலம் பொதுமக்களுக்கு இலவச நூலகத்தை மாவட்ட நீதிபதி மதுசூதனன் திறந்து வைத்தார்.ஒரத்தநாடு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் தஞ்சை மாவட்ட தலைமை நீதிபதி மதுசூதனன் தலைமையில் ஒரத்தநாடு நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு அலுவலகத்தில் நூலகத்தை பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பயன்பெறும் வகையில் இலவசமாக திறந்து வைத்தார்.

நூலக திறப்பு விழாவிற்கு நூலக திறப்பு விழாவிற்கு மாவட்ட சட்டப்பணிகள் நீதிபதி சுதா மற்றும் ஒரத்தநாடு நீதிமன்ற நீதிபதி அல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சுரேஷ் கண்ணன் மற்றும் சங்க செயலாளர் சுவாமிநாதன் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள், பணியாளர்கள், வழக்கறிஞர்கள், காவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நூலகம் திறப்பு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆர்வலர் தீபா செய்திருந்தார்.

Related Stories: