போலி ஆவணம் தாக்கல் எனக்கூறிய மனு தள்ளுபடியை எதிர்த்த வழக்கில் தனுஷிற்கு நோட்டீஸ்

மதுரை:போலி ஆவணம் தாக்கல் எனக்கூறிய மனு தள்ளுபடியை எதிர்த்த வழக்கில், நடிகர் தனுஷிற்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நடிகர் தனுஷ் தங்களது மகன் என உரிமை கோரி, மதுரை  மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கில் அவர் கல்வி மற்றும் பிறப்பு சான்றிதழ்களை தாக்கல் செய்தார். அது போலி என்று கூறி, அவர் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்ககோரி கதிரேசன், மதுரை ஜேஎம் 6 நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். ஆனால் அதில் போதுமான முகாந்திரம் இல்லையெனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து கதிரேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் சீராய்வு மனு செய்துள்ளார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மனுவிற்கு பதிலளிக்குமாறு நடிகர் தனுஷிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Related Stories: