பெரம்பூர்: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த வியாசர்பாடி ரவுடியை கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை வியாசர்பாடி கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (எ) சாட்சி ரமேஷ் (35). இவர் மீது எம்கேபி. நகர், வியாசர்பாடி மற்றும் கொடுங்கையூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் கடந்த 2018ம் ஆண்டு முதல் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்துள்ளார். இதையடுத்து ரமேசுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.