தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு கனிமொழி எம்.பி. இரங்கல்..!!

சென்னை: தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு கனிமொழி எம்.பி. இரங்கல் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தஞ்சை களிமேடு பகுதி தேர்த் திருவிழாவில் அலங்கார சப்பரத்தில் அப்பர் படம் வைத்து இழுத்து வரப்பட்ட போது மின்சாரம் தாக்கிய கொடூர விபத்தில் 11 பேர் உயிரிழந்திருப்பது பெருந்துயரம். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் செல்கிறார்.  உறவினர்களை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: