புதுடெல்லி: ஏஜிபி ஷிப்யார்டு பிரைவேட் லிமிடெட் நிறுவனம் குஜராத், சூரத் ஆகிய இடங்களில் கப்பல் கட்டுமான தளங்களை இயக்கி வருகிறது. இதன் நிறுவனரும், மேலாண் இயக்குனருமான ரிஷி கம்லேஷ் அகர்வால் உள்ளிட்டோர் வங்கிகளில் ரூ.22,842 கோடி வங்கி கடன் வாங்கி, அதை திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.