நாகை அருகே திருமருகலில் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி

நாகை : நாகை அருகே திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்பிடாகை வடிகால் வாய்க்கால்கள் ரூ.10 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.முதல்வர் உத்தரவின்படி நாகை மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் பணி திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்பிடாகை ஆலத்தூர் பனங்காட்டூர், ஆலங்குடிசேரி மற்றும் மானாம்பேட்டை வரை உள்ள பகுதிகளில் வடிகால் வாய்க்கால்கள் ரூ.10 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், காவேரி வடிநில கோட்ட செயற்பொறியாளார் கல்யாணகுமார், உதவி செயற்பொறியாளர் லதாமகேஸ்வரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: