சென்னை: கடலூர் மாவட்டம் திட்டக்குடி லாகூர் பகுதியை சேர்ந்தவர் பூமாலை (52). இவர், சென்னை அசோக்நகர் 10வது அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செக்யூரிட்டியாக கடந்த 6 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை இவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார். அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். போலீசார் விசார ணையில், அடுக்குமாடி குடியிருப்பு முன் போதையில் படுத்து தூங்கிய 4 வாலிபர்களை செக்யூரிட்டி பூமாலை எழுப்பி, அங்கிருந்து செல்லுமாறு கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 4 வாலிபர்களும், அடுக்கமாடி குடியிருப்பில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து செக்யூரிட்டியை சரமாரியாக அடித்துவிட்டு சென்றது தெரியவந்தது.