சென்னை: சட்டப் பேரவையில் நேற்று வனத்துறை மீதான மானிய கோரிக்கையின் போது அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்பு: நீலக்கரிம உள்ளிருப்புக்கான முன்னெடுப்பிற்கு பெரிய ஊக்கமளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசால் ரூ.4.14 கோடி செலவில் மாபெரும் அலையாத்தி காடுகளின் மீளுருவாக்கம் மற்றும் நடவுப் பணிகள் 1050 ஹெக்டேர் பரப்பளவில் செயல்படுத்தப்படும். மன்னார் வளைகுடாவில் 3.6 ஹெக்டெர் பரப்பளவில் பவள பாறைகளின் மீளுருவாக்க பணிகளுக்காக ரூ.3.6 கோடி செலவில் பவளப்பாறைகள் ஆராய்ச்சி, கணிகாணிப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் அரசால் மேற்கொள்ளப்படும்.