சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. சென்னை ஐஐடியில் நேற்றுமுன்தினம் வரை 60 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இருந்தது. இதைதொடர்ந்து நேற்று மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 78 ஆக உயர்த்துள்ளது. இந்நிலையில், ஐஐடியில் கொரோனா பாதித்த மாணவர்கள் மற்றும் பரிசோதனை செய்யும் மாணவர்களை, சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று சந்தித்து பேசினார்.