திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட்டை நாளை முதல் ஆன்லைனில் பெறலாம் என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மே மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைன் டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்காக மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நீண்டகால தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு நாளை காலை வெளியிடப்பட உள்ளது. மே மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்காக முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நீண்ட கால தீராத நேயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாள் ஒன்றுக்கு ஆயிரம் டிக்கெட்டுகள் https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யும் விதமாக நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.