இரண்டு இருசக்கரவாகனம் மோதி கோர விபத்து: தர்மபுரியில் பரபரப்பு

தருமபுரி: தருமபுரி அருகே நகர்ப்புற பகுதியில் கண் இமைக்கும் நேரத்தில் இரண்டு இருசக்கரவாகனம் மோதி விபத்துகுள்ளானது. மூர்த்தி மற்றும் அவரது நண்பன் ஸ்ரீதர்குமார் தனது வீட்டிற்கு மளிகை சாமான்கள் வாங்கி கொண்டு வீட்டிற்கு செல்வதற்காக சாலை வளைவில் திரும்பிய போது அப்போது அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கரவாகனம் அந்த வாகனத்தின் மீது பயங்கரமாக மோதி தூக்கி வீசப்பட்டன. இதில் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 4 பெரும் பலத்த காயம் அடைந்தனர். அங்குள்ள சிலர் அவர்களை மீட்டு அருகில் உள்ள தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர். படுகாயம் அடைந்த 4 பேரூம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இதில் ஒருவரின் உடல்நிலை  கவலை கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Related Stories: