தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச வீடியோக்கள் அனுப்பி மர்ம நபர் தொந்தரவு: நடிகர் நகுல் மனைவி போலீசில் பரபரப்பு புகார்

சென்னை: பிரபல நடிகை தேவயானியின் சகோதரர் நகுல்(37). நடிகரான இவர், பாய்ஸ், காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். சிறந்த நடிகராக வலம் வந்த அவர், நல்ல பாடகராகவும் உள்ளார். இவர் தன்னுடன் படித்த தோழி ஸ்ருதி பாஸ்கரன் என்பவரை காதலித்து கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து ெகாண்டார். தம்பதி இருவரும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவு செய்து வருவது வழக்கம். குறிப்பாக நடிகர் நகுல் தனது மனைவி ஸ்ருதி வாட்டர் பெர்த் என்ற முறையில் பெண் குழந்தையை பெற்றெடுத்தது தொடர்பாக, அவர்கள் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில், நடிகர் நகுல் மனைவி ஸ்ருதியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மர்ம நபர்கள் சிலர், ஆபாசமாக வீடியோ மற்றும் ஆபாச கருத்துக்களை அனுப்புவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார். தொந்தரவு செய்யும் மர்ம நபர், முதல் முறையாக இல்லாமல் இதுபோல்  பல முறை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச வீடியோக்களும், கருத்துக்களையும் அனுப்பி வருகிறார். எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது நடிகர் நகுல் மனைவி ஸ்ருதி ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த புகாரின் படி நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதிக்கு ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவு செய்யும் நபரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கி சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல நடிகரின் மனைவிக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் மர்ம நபர் ஒருவர் தொந்தரவு செய்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: