சென்னை: துணைவேந்தர்களை நியமிப்பது போலவே ஆளுநரையும் மாநில அரசே பரிந்துரைக்க வேண்டும். தமிழக அரசு பரிந்துரைக்கும் 3 பேரில் ஒருவரை ஆளுநர்களாக நியமிக்க வேண்டும் என ஈஸ்வரன் தெரிவித்தார். இதற்கு முன் நடந்த துணைவேந்தர் நியமனம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என சிந்தனைச்செல்வன் கூறினார். பல்கலைக்கழகம் என்பது ஒரு மாநில பொருளாதார வளர்ச்சியின் அங்கமாக உள்ளது என ஜி.கே.மணி தெரிவித்தார்.