பெரம்பலூர்: திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (42). திண்டுக்கல் மாவட்ட வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி லதா (40). இவர் வாலிபால் பயிற்சியாளராக இருந்தார். இவர்கள், லதாவின் தாயார், திருவாரூர் மாவட்டம், இடை மேலையூரை சேர்ந்த செளந்தர்ராஜன் மனைவி வேம்பு (64). லதாவின் அண்ணன் ராமச்சந்திரன் (44), கமலக்கண்ணனின் சித்தி கோவையை சேர்ந்த மணிமேகலை (65) ஆகியோருடன் திண்டுக்கல்லில் இருந்து, சென்னை அருகே சீரடி சாய்பாபா கோயிலுக்கு சாமி கும்பிட செல்வதற்காக, நேற்று முன்தினம் நள்ளிரவு டாடா சபாரி காரில் புறப்பட்டனர்.