ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்பி டி.ஆர்.பாலு ஆகியோர் துவக்கி வைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மொளச்சூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக அரசு சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. கலெக்டர் ஆர்த்தி தலைமை வகித்தார். எம்எல்ஏ செல்வபெருந்தகை, மாவட்ட குழு தலைவர் மனோகரன், ஒன்றியக்குழு தலைவர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் கோபால், மாவட்ட கவுன்சிலர்கள் பாலா, ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்பி டி.ஆர்.பாலு ஆகியோர் கலந்து கொண்டு முகாமை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து பார்வையிட்டனர்.