சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் வாசனை திரவியம், ஜவ்வரிசி தொழிற்சாலை அமைக்க தனியார் நிறுவங்கள் முன்வந்தால் அரசு உதவி செய்யும் என்று பேரவையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சட்டபேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் பேசுகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு விவசாயமும், பூ விவசாயமும் அதிகமாக இருப்பதால் மரவள்ளிக்கிழங்கை வைத்து ஜவ்வரிசி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையும், பூக்கள் வைத்து வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலையும் அமைத்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்றார்.