சென்னை: சட்டப் பேரவையில் நேற்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் பி.கீதா ஜீவன் பதிலளித்து பேசியதாவது: தமிழகத்தில் முதன்முறையாக பெண்களுக்கான மாநில மகளிர் கொள்கையை உருவாக்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக பல்வேறு கருத்துப் பட்டறைகள் நடத்தப்பட்டு, கருத்துக்கள் தொகுக்கப்பட்டு தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை வெளியிட தயார் நிலையில் உள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையங்களில் 2018ம் ஆண்டு முதல் 2021 மார்ச் வரை பயன்பெற்றவர்கள் மொத்தம் 13,121 பேர். ஆனால் திமுக அரசு பொறுப்பேற்ற இந்த ஓராண்டு காலத்தில் 13,152 பேர் பயனடைந்துள்னர்.