கடலூர்: கடலூர் மாவட்டம் வடக்கு மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த்(42) இவர் மனைவி தீபா(35) கட்டிட தொழிலாளியான இவர் தினமும் குடித்து விட்டு வந்து மனைவி தீபா உடன் தகராறு செய்வர் என்பது புகார் இந்த தம்பதிக்கு எட்டு வயதில் மகனும், ஐந்து வயதில் மகளும் உள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆனந்த் குடித்து விட்டு வந்து மனைவி தீபாவுடன் தகராறு செய்துள்ளார். அப்போது உருட்டு கட்டையால் மனைவியை சரமாரியாக தாக்கியதில் தீபா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்துவிட்டார். போதையில் இருந்த ஆனந்தனுக்கு மனைவி இறந்தது தெரியவில்லை அவரும் போதையில் அதே இடத்தில் படுத்து தூங்கியுள்ளார். காலை வெகு நேரமாகியும் வீடு திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியே உள்ளே எட்டி பார்த்தனர். அப்போது தீபா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தது அதிர்ச்சி அடைந்தனர். அவர் அருகிலேயே ஆனந்த் உடல் அசைவற்ற நிலையில் பிணம் போல் கிடந்ததால் அவரும் இறந்து விட்டதாக நினைத்து அண்ணாமலை நகர் காவல்நிலையதுக்கு தகவல் தெரிவித்தனர்.