பொது இடங்களுக்குச் செல்லும் போது மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும்: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

சென்னை: பொது இடங்களுக்குச் செல்லும் போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அரசு கூறியது போல் கருத்துகளை பரப்புவது தவறு என ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை ஐஐடியில் இதுவரை 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

Related Stories: