சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய எம்.எல்.ஏ., செந்தில்குமார், கள்ளக்குறிச்சி தொகுதியில் உள்ள விவசாய நிலங்களை பாதுகாக்க சூரிய மின் வேலி அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கள்ளக்குறிச்சி தொகுதியில் உள்ள விவசாய நிலங்களில் யானை போன்ற விலங்குகளால் எந்த சேதாரமும் ஏற்படுவதில்லை. மயில், மான் மற்றும் காட்டுப்பன்றி போன்ற விலங்குகளால் குறைந்த அளவில் மட்டுமே பயிர் சேதம் ஏற்படுகிறது.