சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் சு.முத்துசாமி பதிலளித்து பேசியதாவது:
வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டு விற்பனை ஆகாமல் இருக்கிற வணிக அலகுகள் 1,082 ஆகும். விற்பனை ஆகாமல் இருக்கும் குடியிருப்புகள் 3,505, மனைகள் 5,074 ஆகும். மக்களுடைய எதிர்பார்ப்பை கணக்கிட்டு அவற்றை தரமாக கட்ட வேண்டும். ஆனால் அவற்றை கணக்கிடாமல் கட்டியதால் அவை தற்போது அரசுக்கு சுமையாக உள்ளன. டெண்டர் விட்டு கட்டிட கட்டுமானம் செய்வோரை தேர்வு செய்தால், அவர்கள் எந்தத் தரத்தில் கட்டுகிறார்கள் என்பதை கண்காணிக்க முடிவதில்லை. எனவே இனி கட்டப்படும் கட்டிடங்களை தனியாருடன் இணைந்தே (ஜாயிண்ட் வெஞ்சர்) கட்டலாம் என்று நினைக்கிறோம்.