சென்னை: அரசின் மதிய உணவு திட்டத்தில் தேங்காய் துண்டு வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.
சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி, நேரத்தின்போது பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா(மமக) பேசினார். அவர், ‘’பூச்சி கொல்லி மருந்து பயன்படுத்தாத உயிர்மை வேளாண் பொருட்களை மதிய உணவில் பயன்படுத்தும் போது மாணவர்களின் புதிய சிந்தனை திறன் வளரும். கலைஞர், சத்துணவு திட்டத்தில் முட்டை வழங்கினார். அதுபோல தேங்காய் துண்டு வழங்கவும் அரசு முன்வருமா?’’ என்றார்.