புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் 3 இடங்களில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாக்களில் ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் மீன்பிடித்து மகிழ்ந்தனர். தற்போது அறுவடை காலம் முடிந்ததால் விராலிமலைக்கு உட்பட்ட தென்னங்குடி, கத்தலூர், தேராவூர், மேட்டுப்பட்டி ஆகிய 3 கிராமங்களில் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் ஜாதி, மதம் பேதமின்றி சமூக நல்லிணக்கத்துடன் பங்கேற்று விரால், கெண்டை, கெழுத்தி, குரவை உள்பட பல்வேறு வகையான மீன்களை மகிழ்ச்சியுடன் பிடித்து வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.