திருத்தணி: திருவாலங்காடு அருகே மாகாளி அம்மன் கோயில் தீமிதி திருவிழா விமரிசையாக நடந்தது. 200 பக்தர்கள் தீக்குண்டம் இறங்கினர். திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் அடுத்த குப்பம்கண்டிகையில் செங்கழுனீர் மாகாளி அம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா விமரிசையாக நடந்தது. இந்த திருவிழா கடந்த 8ம் தேதி தொடங்கியது. 10 நாட்கள் அம்மன் வீதியுலா புறப்பாடு நடந்தது. காப்பு கட்டி விரதம் இருந்த பெண் பக்தர்கள், நேற்று காலை 11 மணியளவில் பால்குடம் சுமந்து ஊர்வலமாக வந்தனர். பகல் 1.30 மணிக்கு மஹா அபிஷேகம், ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.