திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்: இன்று மாலை நடக்கிறது

திருவள்ளூர்: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பு குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்  இன்று (19ம் தேதி) மாலை 5 மணியளவில் கும்மிடிப்பூண்டி ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ஏவிஎஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு மாநில நிர்வாகிகள் கும்மிடிப்பூண்டி கி.வேணு, க.சுந்தரம், இ.ஏ.பி.சிவாஜி, சி.எச்.சேகர், ஜெ.மூர்த்தி, டி.வி.தமிழன் இளங்கோவன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் மு.பகலவன், கேவிஜி.உமாமகேஸ்வரி, மு.கதிரவன், டாக்டர் பரிமளம், ஏ.நிலவழகன், மீ.வீ.கோதண்டன், எம்.எல்.ரவி, ப.வெங்கடாஜலபதி, வெ.அன்புவாணன், கே.சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் கே.சுப்பிரமணி, பா.செ.குணசேகரன், ஏ.வி.ராமமூர்த்தி, அபிராமி குமரவேல் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்த கூட்டத்தில் நடைபெற உள்ள திமுக 15வது உட்கட்சி தேர்தல் பணிகள் குறித்து தலைமை கழக பிரதிநிதிகள் உ.மதிவாணன், ஈரோடு இறைவன் ஆகியோர் ஆலோசனைகள் வழங்க உள்ளனர். எனவே இந்த கூட்டத்தில் கட்சியினர் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: