சென்னை: பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ்களுக்கு அதிகாரிகள் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர். தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி உள்ளிட்ட பண்டிகைகளுக்காக 4 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை வந்தது. இதனைத்தொடர்ந்து சென்னையில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இந்நிலையில், ஒரு சில ஆம்னி பேருந்துகள் இதை பயன்படுத்தி வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்து முறைகேடுகளில் ஈடுபட்டது. இதனை தடுக்க தமிழ்நாடு போக்குவரத்து துறை தமிழகம் முழுவதும் சிறப்பு தணிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டது.